Home / தமிழ் / திருக்குறள் / திருக்குறள் – அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்

திருக்குறள் – அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்

இயற்றியவர் : திருவள்ளுவர்

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல்.

அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்..

குறள் வரிசை: 51 – 60

Thirukkural Vaazhkkai thunainalam 1

Thirukkural Vaazhkkai thunainalam 2

Thirukkural Vaazhkkai thunainalam 3

Thirukkural Vaazhkkai thunainalam 4

Thirukkural Vaazhkkai thunainalam 5

Thirukkural Vaazhkkai thunainalam 6

Thirukkural Vaazhkkai thunainalam 7
Thirukkural Vaazhkkai thunainalam 8

Thirukkural Vaazhkkai thunainalam 9

Thirukkural Vaazhkkai thunainalam 10

குறள் 51:

மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

குறள் 52:

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.

குறள் 53:

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?

குறள் 54:

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

குறள் 55:

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

குறள் 56:

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

குறள் 57:

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

குறள் 58:

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.

குறள் 59:

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.

குறள் 60:

மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.

User Rating: Be the first one !

About admin

Check Also

திருக்குறள் – அதிகாரம் : அடக்கமுடைமை

இயற்றியவர் : திருவள்ளுவர் குறள் பால்: அறத்துப்பால்.  குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: அடக்கமுடைமை குறள் வரிசை: 121 -130 121. அடக்கம் அமரருள் …