Home / தமிழ் / திருக்குறள் / திருக்குறள் – அதிகாரம்: கடவுள் வாழ்த்து

திருக்குறள் – அதிகாரம்: கடவுள் வாழ்த்து

இயற்றியவர் : திருவள்ளுவர்

குறள் பால்: அறத்துப்பால்.குறள் இயல்: பாயிரவியல்.அதிகாரம்: கடவுள் வாழ்த்து.

Thirukkural kadavul vaazhthu
திருக்குறள் – கடவுள் வாழ்த்து
Thirukkural Agara mudhala

Thirukkural Kadavul Vaazhthu 3

Thirukkural Kadavul Vaazhthu 4

Thirukkural Kadavul Vaazhthu 5

Thirukkural Kadavul Vaazhthu 6
Thirukkural Kadavul Vaazhthu 7

Thirukkural Kadavul Vaazhthu 8

Thirukkural Kadavul Vaazhthu 9

Thirukkural Kadavul Vaazhthu 10

குறள் வரிசை: 1 – 10

குறள் 1: 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

குறள் 2:

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

குறள் 3:

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

குறள் 4:

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

குறள் 5:

 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

குறள் 6:

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

குறள் 7:

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

குறள் 8:

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

குறள் 9:

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

குறள் 10:

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

 

About admin

Check Also

திருக்குறள் – அதிகாரம் : அடக்கமுடைமை

இயற்றியவர் : திருவள்ளுவர் குறள் பால்: அறத்துப்பால்.  குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: அடக்கமுடைமை குறள் வரிசை: 121 -130 121. அடக்கம் அமரருள் …