Home / தமிழ் / திருக்குறள் / திருக்குறள் – அதிகாரம்: மக்கட்பேறு

திருக்குறள் – அதிகாரம்: மக்கட்பேறு

இயற்றியவர் : திருவள்ளுவர்

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல்.

அதிகாரம்: மக்கட்பேறு.

குறள் வரிசை: 61 -70

குறள் 61:

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.

குறள் 62:

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.

குறள் 63:

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.

குறள் 64:

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

குறள் 65:

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

குறள் 66:

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

குறள் 67:

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

குறள் 68:

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

குறள் 69:

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

குறள் 70:

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.

About admin

Check Also

திருக்குறள் – அதிகாரம் : அடக்கமுடைமை

இயற்றியவர் : திருவள்ளுவர் குறள் பால்: அறத்துப்பால்.  குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: அடக்கமுடைமை குறள் வரிசை: 121 -130 121. அடக்கம் அமரருள் …