Home / தமிழ் / திருக்குறள் / திருக்குறள் – அதிகாரம்: அன்புடைமை

திருக்குறள் – அதிகாரம்: அன்புடைமை

இயற்றியவர் : திருவள்ளுவர்

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல்.

அதிகாரம்: அன்புடைமை

குறள் வரிசை: 71 – 80

71 – அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

        புண்கணீர் பூசல் தரும்.

72 – அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

        என்பும் உரியர் பிறர்க்கு.

73 – அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு

        என்போ டியைந்த தொடர்பு.

74 – அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈ.னும்

         நண்பென்னும் நாடாச் சிறப்பு.

75 – அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து

         இன்புற்றார் எய்தும் சிறப்பு.

76 – அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்

         மறத்திற்கும் அஃதே துணை.

77 – என்பி லதனை வெயில்போலக் காயுமே

       அன்பி லதனை அறம்.

78 – அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

        வற்றல் மரந்தளிர்த் தற்று.

79 – புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை

        அகத்துறுப் பன்பி லவர்க்கு.

80 – அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு

         என்புதோல் போர்த்த உடம்பு.

 

About admin

Check Also

திருக்குறள் – அதிகாரம் : அடக்கமுடைமை

இயற்றியவர் : திருவள்ளுவர் குறள் பால்: அறத்துப்பால்.  குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: அடக்கமுடைமை குறள் வரிசை: 121 -130 121. அடக்கம் அமரருள் …