Home / தமிழ் / திருக்குறள் / திருக்குறள் – அதிகாரம்: அரண்வலியுறுத்தல்

திருக்குறள் – அதிகாரம்: அரண்வலியுறுத்தல்

இயற்றியவர் : திருவள்ளுவர்

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல்.

அதிகாரம்: அறன்வலியுறுத்தல்.

குறள் வரிசை: 31 – 40

Thirukkural Aran Valiyuruthal 1

Thirukkural Aran Valiyuruthal 2

Thirukkural Aran Valiyuruthal 3

Thirukkural Aran Valiyuruthal 4

Thirukkural Aran Valiyuruthal 5

Thirukkural Aran Valiyuruthal 6

Thirukkural Aran Valiyuruthal 7

Thirukkural Aran Valiyuruthal 8
Thirukkural Aran Valiyuruthal 9

Thirukkural Aran Valiyuruthal 10

குறள் 31:

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.

குறள் 32:

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.

குறள் 33:

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

குறள் 34:

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.

குறள் 35:

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

குறள் 36:

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

குறள் 37:

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

குறள் 38:

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.

குறள் 39:

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.

குறள் 40:

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.

User Rating: Be the first one !

About admin

Check Also

திருக்குறள் – அதிகாரம் : அடக்கமுடைமை

இயற்றியவர் : திருவள்ளுவர் குறள் பால்: அறத்துப்பால்.  குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: அடக்கமுடைமை குறள் வரிசை: 121 -130 121. அடக்கம் அமரருள் …